Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அகில இந்திய இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு ஆர்ப்பாட்டம்

மே 26, 2020 11:04

திருச்சி: தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களை திறந்து பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் அகில இந்திய இந்து முன்னணி சார்பில் தோப்புக்கரணம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள இந்துக் கோயில்கள் அனைத்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்துவிடக் கோரி திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய இந்து முன்னனி  மாவட்ட தலைவர் கோபால்ஜி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், போராட்டக்காரர்கள் தோப்புக்கரணம் போட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய இந்து மகா சபா  மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஸ்ரீரங்கம் மண்டல தலைவர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

* இதேபோல் உறையூர் மண்டலத்திற்குட்பட்ட பஞ்சவர்ணசுவாமி கோவில் முன் மாநிலப் பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில், மாவட்டச் செயலாளர் மணிகண்டன் முன்னிலையில் 4 நபர்கள் மட்டும் சமூக ‌‌இடைவெளியுடன் தோப்புகரணம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்